மறதி மருந்து

சற்று அவசரமாகத் தான்
செல்ல வேண்டியிருந்தது
நேரமும் ஆகி விட்டது

வழியெங்கும் பச்சை விளக்குகளும்
கருணை காட்டவில்லை

வாகனமும் சற்று தள்ளியே
நிறுத்த வேண்டியிருந்தது
நடையும் நீளம் தான்
நான் அலுவலகம் நுழையும் முன்
எனக்கான வேலைகள் நுழைந்துவிட்டன

மதிய உணவு கூட சற்று உப்பு குறைவே
காபி கூட ஆறி விட்டது

கல்லொன்று கூட
என் விரலில்தான்
ரத்தச் சுவை கண்டது

தோங்கித் துலங்கி வீடு சேரும்முன்
மழையிலும் நனைந்து விட்டேன்
எல்லாம் போகட்டும்
நான் வீட்டில் நுழையும் போது
கொஞ்சமே கொஞ்சமாய் நீ
சிரித்து விடு!

எல்லாம் மறந்து போகும்.

பற்றி mathilogesh
கவிதை எழுதுவதில் ஆர்வம் நிறையவே இருந்தாலும், எழுதும் அளவிற்கு திறன் இல்லை. இதுவரை ஒரு இருபது கவிதைகள் எழுதியிருப்பேன், அனைத்தும் கேவலம் - சுமார் ரகம். அதிருக்கட்டும், நான் ஒரு நல்ல ரசிகன்; நல்ல கவிதைகள், எளிமையான வார்த்தை ஜாலங்களை ரசிப்பேன்.

பின்னூட்டமொன்றை இடுக