கடலோடு…
ஜனவரி 27, 2022 பின்னூட்டமொன்றை இடுக
களித்துப் போகிறாள் என் செல்லம்
தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும் அலைக் கரங்களால்
மகிழ்ந்து போகிறாள்
குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி சிலிர்த்து
கூவிக் கூவி வியந்து போகிறாள்
யார் குரல் பெரிதென
போட்டி போடுகிறாள்
அலை உயரம் இல்லாத என்
அல்லி மலர்ச் செண்டு
களைத்துப் போகிறது கடல்
அடங்கி, என் மகள் கால் தடவி
சென்று வா என அனுப்பி விடுகிறது
பிரிய மனமின்றி நடுங்கும் குளிரோடு
மீண்டும் என்று வருவோம் என
என் விரலைக் கேள்விக் கொக்கியால்
பிடித்துக் கொண்டே விலகி வருகிறாள்
அவள் விரலில் தான் நான்
மனம் முழுதும்
கடலே.