குறுக்கெழுத்துப் போட்டி விடைகள்

சென்ற வாரம் நான் பதித்த கு. போ.வுக்கு உலகமெங்கும் இருந்து ரசிக கோடிகளின் அஞ்சல்கள் வந்தவண்ணம் உள்ளன. எங்கள் ஊர் அஞ்சல் அலுவலகத்தில் கூடுதல் ஆட்கள் என்னுடைய சொந்த செலவில் அமைத்து இந்த அஞ்சல்களை மூட்டை கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐரீன் சூறாவளியும் சேர்ந்து கொண்ட காரணத்தால் நான் விடைகளை வெளியிடுவதாக முடிவு செய்து விட்டேன். இனி யாரும் இதற்கு விடைகளை அனுப்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விஜய்யும், கலையரசியும் ஏற்கனவே தத்தமது விடைகளை அனுப்பி விட்டனர்.  அவலூர்பேட்டையில் எனது உற்றார் உறவினர் பெரும்பாலான (அனைத்து) விடைகளைக் கண்டறிந்து விட்டனர்.

குவளை, இலச்சினை, மரியாதை ராமன், திரிசடை போன்ற விடைகள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது போலும்.

இதோ விடைகள்.

அமெரிக்கப் பொங்கல்

நவம்பர் மாதம் நான்காவது வியாழன் ஆனாலே அமேரிக்கா எங்கும் ஒரே கொண்டாட்டம் தான். தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடக்க, இல்லங்களில் தான் கொண்டாட்டம் எல்லாம்…

நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving)  ஒரு நானூறு வருடங்களுக்கு முன்னாள் ஏதோ ஒரு காரணத்துக்காக (உள்ளூர்க் காரர்களின் விருநதோம்பலுக்குப் பயணிகள் நன்றி தெரிவித்தனர் என்று கேள்வி!) ஆரம்பிக்கப் பட்டாலும், இப்போது அது பல மாறுதலுக்கு உட்பட்டு இது ஒரு அமெரிக்கக் கலாசார விழாவாக ஆகியுள்ளது. இந்நாளில் குடும்பங்கள் ஒன்று கூடி அவரவர் எதற்காக நன்றிக் கடன் பட்டுள்ளனர் என்று தெரிவித்து, குடும்பத்துடன் அமர்ந்து சில சிறப்பான உணவு வகைகளை உண்டு நாளைக் கழிக்கின்றனர்.. வான்கோழி, பூசணிக்காயில் செய்த இனிப்பு, சிலவகை இனிப்பு ரொட்டிகள், என்று குடும்பத்திற்கு தகுந்த உணவுகளை சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.

போர்ட்டோ ரிகோ ஒரு அமெரிக்க காலனி ஆனதனால், இங்கும் நன்றி சொல்வதுண்டு. இந்த நாளில் முக்கியமான ஒரு உணவு டர்க்கி –  நம்மூரு வான் கோழி… குடும்பத்தில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைப் பொருத்து வித விதமான அளவில் அதைப் பிடித்து (கடையில் தான்)… கனல் அடுப்பில் வைத்துப் பொறித்து… குடும்பத்துடன் உண்பார்கள். இந்த நாளை வான் கோழி நாள் என்று கூட சொல்வதுண்டு! அமெரிக்க அதிபர் கூட இந்நாளினை முன்னிட்டு ஒரு வான்கோழியை மன்னித்து விடுவார் – இந்த ஒரு வான் கோழியைக் கொல்வதில்லை! அமெரிக்க, பொதுவாகவே மேற்கத்தியக் கலாச்சாரத்தில், கூட்டுக் குடும்பம் என்பது அவ்வளவாக இருப்பதில்லை. இதைப் போன்ற சில விடுமுறை நாட்களில் தான் அவர்கள் ஒன்று சேர்வதுண்டு… மகன்கள், மருமகள்/ன்கள், சகோதர சகோதரிகள், தாத்தா பாட்டிகள் என அனைவரும் ஒன்று கூடி வான்கோழியை ஒரு வழி பார்ப்பதுண்டு…  இந்த வாரத்தில் தொலைக்காட்சித் தொடர்களிலும் (sitcoms – one of my favorites is here) ஒரே நன்றி தெரிவித்தல் தொடரபான நிகழ்வுகள் தான்.

இந்த நாளில் வீட்டுக்குப் போக முடியாதோர் என்னுடைய விடுதியில் இன்றொரு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். வான்கோழியை சமைக்க ஏகப்பட்ட நேரம் ஆகுமானதால் கடையிலேயே வாங்கி வந்து விட்டனர் — நான் புளியோதரையும், தக்காளி சாதமமும் கொண்டு சென்றேன்… என்னடா வித விதமாக சமைத்து எடுத்துச் செல்லாமல் கட்டுச் சோறு செய்து கொண்டு சென்றானே என்று நீங்கள் என எண்ணலாம்… அதற்குக் காரணம் உண்டு: (1) இந்த வகைகள் எந்தக் கடையில் கிடைப்பதில்லை, ஏனெனில் இங்குள்ள இந்திய உணவகங்கள் பெரும்பாலும் வாடா நாட்டவரால் நடத்தப் படுபவை — தந்தூரி வகைகளும், பிரியாணி வகைகளும் ரோட்டி வகைகளும் தான் பிரதானம். (2) இவற்றைச் சமைப்பது மிகவும் சுலபம்.. (3) கொஞ்சம் புளிப்பும் காரமும் இருந்தாலே இவர்களை அசத்தி விடலாம்…

விருந்து எதிர்பார்த்தது போல் நன்றாகவே இருந்தது… பத்து பேருக்கு மேல் வருவார்கள் என்று எதிர் பார்த்தேன், என்னோடு சேர்த்து ஆறு பேர் தான்… ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் – ஒரு டச்சுக் காரன், கலிபோர்னியாவில் இருந்து வந்த ஒரு மெக்சிகோ பெண், நியு யார்க் பெண் ஒருத்தி, கொலம்பிய நாட்டுப் பெண் ஒருத்தி, அப்புறம் மார்ட்டினிக் எனும் கரிபியன் தீவில் இருந்து ஒரு பெண் என ஒரே கலவை தான்… டச்சுக் காரனுக்கு இதுதான் முதல் நன்றி தெரிவிக்கும் நாளாம் — இங்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. மார்ட்டினிக் பெண் இங்கே ஏழு வருடமாக இருப்பதனால் ஏற்கனவே பார்த்திருக்கிறாள் போல… நானும் இங்கு வந்து இத்தோடு ஐந்து வருடம் ஆயிற்றா, பல வகையில் பல இடங்களில் கிடைக்கும் பாக்கியம் கிடைத்தது — பொதுவாக நண்பர்கள் வீட்டிலோ அல்லது பணியிட நண்பர்களுடனோ கொண்டாடுவதுண்டு. இந்த முறை இங்கேயே…

இந்த முறை இதுதான் மெனு: வறுத்த வான் கோழியுடன், காராமணி போட்ட சோறு (arroz con gandules), பூசணிக்காய் பை (pumpkin pie – என்னால் மொழிபெயர்க்கவோ அல்லது இணையான நம்மூர் இனிப்பைக் கண்டறியவோ முடியவில்லை), பூண்டு தடவிய ரொட்டி, தக்காளி மற்றும் புளி சாதங்கள், அன்னாசிப் பழக்கூட்டு (மார்டினிக் பெண் செய்து கொண்டு வந்திருந்தாள்: மிகவும் சுலபம் — இலவங்கப் பட்டைத் தூள (cinnamon powder), எலுமிச்சை சாறு இவற்றை அன்னாசிப் பழத் துண்டுகளோடு கலந்தால் அன்னாசிப் பழக்கூட்டு (pineapple salad) தயார்), என்று சின்னதாக ஒரு மெனு.

அழகான ஒரு பிரார்த்தனையோடு நியு யார்க் பெண் விருந்தைத் துவக்கினாள்… “இங்கு நாம் பல்வேறு மதம் மற்றும் கலாசாரத்தில் இருந்து வந்திருப்பதால் பொதுவான ஒரு பிரார்த்தனையைக் கூறுகிறேன்… இன்று காலையில் நாம் உயிரோடு விழித்ததற்காகவும், பல இடங்களில் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாமல் பல கோடி பேர் இருக்கும் பொது நமக்கு இந்த அருமையான உணவு கிடைத்திருப்பதற்காகவும், குடும்பத்துடன் இல்லாவிடினும் அருமையான நண்பர்களுடன் இருக்க வாய்ப்பு கிடைததற்காகவும் நன்றி”.. அடுத்த ஒரு இரண்டு மணி நேரம் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே விருந்து நடந்து முடிந்தது… சாத வகைகளை விரும்பி உண்டனர்.

அவரவர் கலாச்சாரத்தில் இதற்கு இணையான ஏதாவது ஒரு விழா இருக்கிறதா என்று கேட்ட போது நான் நம்முடைய பொங்கல் திருநாளைக் குறித்து பகிர்ந்து கொண்டேன் – கதிரவனுக்கும் மாடு கன்றுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் அல்லவா…

ஒருவகையில் என்னுடைய பொங்கல் இரண்டு மாதம் முன்னரே வந்து விட்டது போல் ஒரு தோற்றம்… அனைவருக்கும் அமெரிக்கப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

Honesty

Honestly, I didn’t expect this would ever happen to me. I’m not bragging. This could happen to any of you. And you’d even be proud of that. I am not. I am not proud of this fact one bit.

I have studied in Tamil medium until high school and after that switched to English Medium in College. In school and also in college I wrote one-liners, and occasional one-page poems in Tamil and even had the guts to participate in poetry competitions in Tamil. I was always proud of my Tamil Grammar and was even able to point out several mistakes in our magazines. I was able to appreciate a good Poetry book (non-Sangham literature) in Tamil. In the first summer in college we went to an Industry and we were asked to converse in English by the Plant Manager. Not a single word crossed my throat, and could never speak. In the end, when the Manager almost gave up, a friend of mine spoke valiantly and we were all asked to leave the premises, not because we were so bad, but because it was the last day of the training.

I’m giving you such a long story because it has all changed. Yesterday, we had a lovely thanksgiving dinner, and I was planning to write a Tamil Blog article about the tradition of Thanksgiving, what we’d planned to do, what I cooked for the dinner and why. I stared at the computer for a few hours (with youtube and some Chemistry gaps, of course), typed in a few sentences and looked in disgust how awful the sentence formation and the entire blog was. Now, I have come to a conclusion. Officially, I can’t write fluently in Tamil. It’s awful. I could publish this ~300 word blog in under 20 mins, although badly. I’m going to post it and if I found this equally bad in a day or two, well, I’ll admit I can’t write at all.

Good luck to y’all. Hope you’re not as bad in your first language as I am.

குறுக்கெழுத்துப் போட்டி

நண்பர் விஜய் நெடுங்காலமாகவே குறுக்கெழுத்துப் போட்டிகளை வரைந்து வருகிறார்…  நாமும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போமே என்றதன் விளைவுதான் இங்கே உள்ள இந்த குறுக்கெழுத்துப் போட்டி. இதுதான் என்னுடைய முதல் முயற்சி. சற்று நீளமாகவும், சில்லறைத்தனமாகவும் இருக்கும் இந்தப் புதிரினை மன்னித்து அருளவும்.

இனி புதிருக்குப் போவோம்.

இடமிருந்து வலம் 

1. சிறுவர் சிறுமியர் பாடப் புத்தகங்கள் இன்றி இரண்டு மாதங்கள் அமர்ந்திருந்த இடம் (7).

4. சட்டத்திற்குள் அடங்காதது (2, 4).

6. பண்டைய அரசர்கள் பலப்பரீட்சை செய்த இடம் (6).

8. இந்த மாதத்தின் நிலவிற்கு மட்டும் அத்தனை சிறப்பு – கொண்டாட்டங்கள் சற்று அதிகம் (4).

9. சொம்பு – இந்தப் பெயரில் பூ கூட உண்டு (3)

11. மெய் (3).

13. இந்த சொர்க்கம் சற்று குழப்பமானது (5).

14. காபி (4).

17. ராமாயணத்தில் ஒரு நல்ல ராட்சசி (4).

18. விரைவான கேள்வி-பதில் (3, 2).

20. தெனாலியில் பிறந்த விகடகவிக்கு மதிப்பு (4, 3).

22.  விண்மீன்கள் பளிச்சிடும் நேரம் (5).

23. மேலே உள்ள கட்டங்கள் ஒரு _____ (3).

மேலிருந்து கீழ்

1. இதிலுள்ள வட்டங்கள் சினேகாவிற்கு ஒரு ரூபாய் நாணயம் போல் தெரிந்ததாம் (6).

2. சில்லென்று குண்டுமல்லி கிடைக்கும் இடம் (4).

3. நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும், சில சமயத்தில் தனியொருவருக்கும் கூட இது இருப்பதுண்டு. அனுமன் சீதைக்குக் காட்டிய மோதிரம் கூட இவ்வகையைச் சார்ந்ததுதான் (5).

4. கூறு, புகர் (4).

5. தங்கத்தின் தரமறிய இது தேவை (4)

7. அய்யன் திருவள்ளுவர் நிற்கும் இடம் (7).

10. நடிகைகள் தங்கள் கவர்ச்சியில் இது இல்லை என்று சத்தியம் செய்வார்கள் (4).

12. உண்ணும் உணவு உடலினுள் இந்த மாற்றத்துக்கு உட்படுகிறது (5).

13. மீனாவும் பத்மினியும் நடனமாடிய ராகம் (4).

15. இவர்களைப் பார்க்காத ஆண்கள் பேராண்மை கொண்டவர்கள் (5).

16. (மழை) (4).

19. கேள், விசாரி (3).

21. புதுக்கவிதைகள் இவ்விலக்கணத்திற்குக் கட்டுப்படாதவை (3).

Follow

Get every new post delivered to your Inbox.